பறத்தலும் ஊர்தலும்

வீட்டு பல்கனியை எட்டிப்பார்க்கும் மரக்கிளையில் சிட்டுக் குருவிகளுக்கான தீனை ஒரு சிறு மரவீடு செய்து அதற்குள் இடுவது எனது வழமையாக இருந்தது. பனிப்பொழிவில் அது உணவுதேடி அந்தரப்படுவதை காண சகிக்கவில்லை. அதிலிருந்து அந்த சிறுவீட்டில் தீன்தானம் தொடங்கியது. படபடக்கும் சிற்றிறகையும் அதன் சிறு அலகின் இசையசைவையும் எனது ரசிகன் பார்த்துக்கொண்டு இருப்பான். இப்படியே ஒரு வெயில்கால பருவத்திலும் நான் தொடர்ந்து செய்ததைக் கண்ட அயலவன் “இப் பருவ காலத்தில் பறவைகள் சுயமாக உணவுதேடக்கூடியன. அதற்கான அதனது உழைப்பை இல்லாமலாக்கி சோம்பேறிகளாக்கிவிடாதே” என சொன்னான். உறைத்தது. இயற்கை மீதான இன்னொரு புரிதலாக அது இருந்தது. ஒரு வாழ்க்கைப் பாடமாகவும் இருந்தது.

Continue reading “பறத்தலும் ஊர்தலும்”

ஆதரிப்போம் !

கண்முன்னே நடக்கும் காஸா இனப்படுகொலையை நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தாலோ, ஐநா வினாலோ தடுத்து நிறுத்த முடியாத ஒரு பெரும் மனித அவலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மேலாதிக்க நலனையும் நயவஞ்சகத்தையும் உள்நிறுத்தி அரசியல்வாதிகளும் அரசும் பேசும் ஜனநாயகம் வார்த்தை ஜாலங்களாக தொடர்கின்றன. மக்கள் வீதிக்கு இறங்கி பெரும் ஊர்வலங்களை நடத்தியும் பார்த்தார்கள். எல்லா இயலாமைகளும் கடைசியில் மாணவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்ட நிலைதான் இன்றைய காட்சிகள்.

Continue reading “ஆதரிப்போம் !”

தடங்களில் அலைதல்

நூல் அறிமுகம்

“உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகளே அல்ல. அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள். ஆனால் உங்களிடமிருந்து அல்ல. அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல” என்ற கலீல் ஜிப்ரானின் புகழ்பெற்ற கவிதையுடன் ஆரம்பித்து, வளரும் குழந்தைகளின் முதல் கண்டுபிடிப்பு “என் தந்தை என்பவர் எவ்வளவு முட்டாள் என்பதே” என பேச்சின் நடுவில் எடுத்துவிட்டேன்.

என் பேச்சு முடிய கீழே இறங்கினேன். வாட்டசாட்டமான ஒருவர் “நான் உம்மோடு பேச வேண்டும். வாரும் வெளியே பேசுவோம்” என்றார்.

Continue reading “தடங்களில் அலைதல்”

முற்றவெளி மந்திரம்

Continue reading “முற்றவெளி மந்திரம்”

செங்கடல் தீ

Continue reading “செங்கடல் தீ”

மாற்றத்திலிருந்து தப்ப முடியாது!

Continue reading “மாற்றத்திலிருந்து தப்ப முடியாது!”

ஓட்டிச உலகில் நானும்


தன் வரலாற்று நூல்


ஆசிரியர் : மைதிலி றெஜினோல்ட்
வெளியீடு : எங்கட புத்தகங்கள் (யாழ்ப்பாணம்).
“இந்தப் புத்தகத்தை எங்கட புத்தகங்கள் வெளியீடாக வெளியிட வேண்டும் என்று முழுமூச்சாகச் செயற்பட்டு சிறப்புற வெளிக் கொணர்ந்திருக்கும் வெற்றிச்செல்வி அவர்களுக்கும் எமது நன்றிகள்” என எங்கட புத்தகங்கள் குலசிங்கம் வசீகரன் அவர்கள் குறிப்பிடுகிறார்.

Continue reading “ஓட்டிச உலகில் நானும்”

மாவீரர் தினம்

2023

P. Duvaraga & AI Duvaraga

Continue reading “மாவீரர் தினம்”

1027

மியன்மாரில் போர்

ஊடகங்களில் உக்ரைன்-ரசியா என சுழன்றுகொண்டிருந்த போர்ச் செய்திகளை ஒக்ரோபர் 7 அன்று இஸ்ரேல்-கமாஸ் மோதல் அள்ளிக் கொண்டு போனது. பெரும் வல்லரசுகள் சம்பந்தப்பட்ட இந்தப் போர்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே ஊடக சந்தடியில்லாமல் ஒக்ரோபர் 27 மியன்மாரில் போர் வெடித்திருக்கிறது.

Continue reading “1027”

எனது பெயரை எழுது அம்மா!

  • ஸைனா அஸாம்

காஸாவில் தமது குழந்தைகளின் கால்களில் அவர்களது பெயரை பல பெற்றோர் எழுதிவிடுகின்றனர். குண்டுகளால் தமது குழந்தைகள் கொல்லப்படுமிடத்து அவர்களை அடையாளம் காண இந்த வழியை தேர்ந்தெடுத்துள்ளனர். இதுகுறித்து “ஸைனா அஸாம்” என்பவர் எழுதிய இந்தக் கவிதை இதயத்துள் இறங்கி ஏதோ செய்தது. மொழிபெயர்த்திருக்கிறேன். (இந்தக் கவிதை வாசிப்பு காணொளி வடிவில் ஆங்கிலத்தில் வந்திருக்கிறது. கவிதையின் இறுதியில் இணைப்பு உள்ளது).


எனது பெயரை எழுது அம்மா!

Continue reading “எனது பெயரை எழுது அம்மா!”