தடங்களில் அலைதல்

நூல் அறிமுகம்

“உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகளே அல்ல. அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள். ஆனால் உங்களிடமிருந்து அல்ல. அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல” என்ற கலீல் ஜிப்ரானின் புகழ்பெற்ற கவிதையுடன் ஆரம்பித்து, வளரும் குழந்தைகளின் முதல் கண்டுபிடிப்பு “என் தந்தை என்பவர் எவ்வளவு முட்டாள் என்பதே” என பேச்சின் நடுவில் எடுத்துவிட்டேன்.

என் பேச்சு முடிய கீழே இறங்கினேன். வாட்டசாட்டமான ஒருவர் “நான் உம்மோடு பேச வேண்டும். வாரும் வெளியே பேசுவோம்” என்றார்.

Continue reading “தடங்களில் அலைதல்”

முற்றவெளி மந்திரம்

Continue reading “முற்றவெளி மந்திரம்”

செங்கடல் தீ

Continue reading “செங்கடல் தீ”

மாற்றத்திலிருந்து தப்ப முடியாது!

Continue reading “மாற்றத்திலிருந்து தப்ப முடியாது!”

ஓட்டிச உலகில் நானும்


தன் வரலாற்று நூல்


ஆசிரியர் : மைதிலி றெஜினோல்ட்
வெளியீடு : எங்கட புத்தகங்கள் (யாழ்ப்பாணம்).
“இந்தப் புத்தகத்தை எங்கட புத்தகங்கள் வெளியீடாக வெளியிட வேண்டும் என்று முழுமூச்சாகச் செயற்பட்டு சிறப்புற வெளிக் கொணர்ந்திருக்கும் வெற்றிச்செல்வி அவர்களுக்கும் எமது நன்றிகள்” என எங்கட புத்தகங்கள் குலசிங்கம் வசீகரன் அவர்கள் குறிப்பிடுகிறார்.

Continue reading “ஓட்டிச உலகில் நானும்”

மாவீரர் தினம்

2023

P. Duvaraga & AI Duvaraga

Continue reading “மாவீரர் தினம்”

1027

மியன்மாரில் போர்

ஊடகங்களில் உக்ரைன்-ரசியா என சுழன்றுகொண்டிருந்த போர்ச் செய்திகளை ஒக்ரோபர் 7 அன்று இஸ்ரேல்-கமாஸ் மோதல் அள்ளிக் கொண்டு போனது. பெரும் வல்லரசுகள் சம்பந்தப்பட்ட இந்தப் போர்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே ஊடக சந்தடியில்லாமல் ஒக்ரோபர் 27 மியன்மாரில் போர் வெடித்திருக்கிறது.

Continue reading “1027”

எனது பெயரை எழுது அம்மா!

  • ஸைனா அஸாம்

காஸாவில் தமது குழந்தைகளின் கால்களில் அவர்களது பெயரை பல பெற்றோர் எழுதிவிடுகின்றனர். குண்டுகளால் தமது குழந்தைகள் கொல்லப்படுமிடத்து அவர்களை அடையாளம் காண இந்த வழியை தேர்ந்தெடுத்துள்ளனர். இதுகுறித்து “ஸைனா அஸாம்” என்பவர் எழுதிய இந்தக் கவிதை இதயத்துள் இறங்கி ஏதோ செய்தது. மொழிபெயர்த்திருக்கிறேன். (இந்தக் கவிதை வாசிப்பு காணொளி வடிவில் ஆங்கிலத்தில் வந்திருக்கிறது. கவிதையின் இறுதியில் இணைப்பு உள்ளது).


எனது பெயரை எழுது அம்மா!

Continue reading “எனது பெயரை எழுது அம்மா!”

“இருமை” சிந்தனை முறை

சுவிஸ் வரலாற்று ஆசிரியர் டானியல் கன்ஸர் அவர்கள் உக்ரைன்- ரசிய போரின்போது ஜேர்மனி-ரசிய முரண்பாட்டை விளக்கும் போது ஒரு வசனத்தை பாவித்திருந்தார். அமெரிக்கா அதிகாரம் செலுத்தும் நாட்டோவிலுள்ள ஜேர்மனியானது அமெரிக்காவுக்கும் ரசியாவுக்கும் இடையில் எங்கே நிற்கும் என பார்த்தால் அது அதன் மத்திய புள்ளியிலிருந்து ரசியா பக்கம் சாய்ந்ததாக இருக்கும் என்றார். அந்த அரசியல் கருத்து மீது இன்னொருவருக்கு வேறு அபிப்பிராயங்கள் இருக்கும். அதல்ல நான் சொல்ல வந்தது. (அமெரிக்கா பக்கமா ரசியா பக்கமா என்பது போன்ற) இருமை நிலைப்பாடுகள் அல்லது சிந்தனை முறை பற்றியது. அவரது அந்த கூற்றில் மாறுபட்ட அரசியல் அபிப்பிராயங்களின் பன்முகத்தன்மையான “உரையாடல்” ( dialogue) வெளியை விட்டுவைக்கும் சொல்லாடலை குறிப்பிடுகிறேன். இங்கு சாதாரண சமூகத்திடமும் இந்த சிந்தனை முறை இருப்பதை நான் கண்டிருக்கிறேன்.

Continue reading ““இருமை” சிந்தனை முறை”

வழித்தடம்

மேற்குலகின் அளவுகோல்கள் வசதிக்கேற்ப வளைந்து கொடுக்கும் ஒன்று என்பது தொடர் வரலாறாக உள்ளது. 1948 இல் இஸ்ரேல் என்ற நாட்டின் உருவாக்கமே ஆயிரக் கணக்கான பலஸ்தீன மக்களை கொலைசெய்தும் ஏழு இலட்சம் பேரை அகதிகளாக்கியும் 500 பலஸ்தீன கிராமங்களை அழித்து நில ஆக்கிரமிப்பு செய்ததும் என ஒரு வரலாற்றைக் கொண்டது. இந்த வரலாற்றை நாக்பா என பலஸ்தீன மக்கள் கவலையுடன் நினைவுகூர மறுபுறம் இஸ்ரேல் தேசியதினமாக கொண்டாடும் வரலாறு அது. அதன்பின்னாக காலத்துக்குக் காலம் பல பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் மூலம் படிப்படியாக பலஸ்தீனத்தின் பெருநிலப்பரப்பை இஸ்ரேல் விழுங்கிக் கொண்டது. ஒவ்வொரு இராணுவ நடவடிக்கைகளிலும் பல பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டும் அகதிகள் ஆகியும் தமது நிலத்தையும் வாழ்விடங்களையும் இழந்துகொண்டது வரலாறு.

Continue reading “வழித்தடம்”